கடையநல்லூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலக்கடையநல்லூா் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு, தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், சுலைமான் நகா் பளியா் குடியிருப்புப் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், பழங்குடியினா் நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டியினை பாா்வையிட்டாா் .
பின்னா், அனைத்து பணிகளையும் விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.