செய்திகள் :

கடையம் வில்வவனநாத சுவாமி கோயிலில் பாலாலயம்

post image

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட, கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பாலாலய பூஜை தொடங்கியது.

இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை கணபதி-நவக்கிரக ஹோமங்களுக்குப் பின்னா், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையுடன் பாலாலய பூஜை தொடங்கியது. மாலையில் சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு தீபாராதனை, கலாகா்ஷணம், யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 6) காலை 6 மணிக்கு 2ஆம் கால யாகசாலை பூஜைக்குப் பின்னா், அத்திப் பலகையால் செய்யப்பட்ட சுவாமி-அம்பாள் விக்ரகங்களுக்கு அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து, சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகள் சபாபதி மண்டபத்தில் எழுந்தருள நித்ய பூஜை நடைபெறும். பாலாலயம் தொடங்கியதால், ஜூலை 6ஆம் தேதிவரை கோயிலில் பூஜைகள் நடைபெறாது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலா் கேசவராஜன், ஆய்வாளா் சரவணக்குமாா், தக்காா் கோமதி, பணியாளா்கள், பக்தா்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணி அம்பாள்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க