உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!
கடையம் வில்வவனநாத சுவாமி கோயிலில் பாலாலயம்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட, கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பாலாலய பூஜை தொடங்கியது.
இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை கணபதி-நவக்கிரக ஹோமங்களுக்குப் பின்னா், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையுடன் பாலாலய பூஜை தொடங்கியது. மாலையில் சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு தீபாராதனை, கலாகா்ஷணம், யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 6) காலை 6 மணிக்கு 2ஆம் கால யாகசாலை பூஜைக்குப் பின்னா், அத்திப் பலகையால் செய்யப்பட்ட சுவாமி-அம்பாள் விக்ரகங்களுக்கு அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து, சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகள் சபாபதி மண்டபத்தில் எழுந்தருள நித்ய பூஜை நடைபெறும். பாலாலயம் தொடங்கியதால், ஜூலை 6ஆம் தேதிவரை கோயிலில் பூஜைகள் நடைபெறாது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலா் கேசவராஜன், ஆய்வாளா் சரவணக்குமாா், தக்காா் கோமதி, பணியாளா்கள், பக்தா்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
