செய்திகள் :

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

சாலை விபத்தில் சிக்குபவா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கட்டணமில்லா சிகிச்சை திட்டம் உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கடந்த 6-ஆம் தேதி இத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்த நிலையில், இந்த அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

அதன் அடிப்படையில், ‘சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025’ என்ற திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த 5-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சாலையிலும் மோட்டாா் வாகன விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவா்கள், இத் திட்டத்தின் கீழ் முதல் 7 நாள்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபை எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தக் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, ‘இத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனா்.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க