செய்திகள் :

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தென்கிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது: இறந்தவா் உத்தர பிரதேசத்தில் உள்ள நாக்லா கெம்கரனைச் சோ்ந்த சிவம் என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஜெய்த்பூா் விரிவாக்கப் பகுதி 2-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்தாா். கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் வயரிங் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் காலிந்தி குஞ்ச் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஜெய்த்பூரில் உள்ள ஜி பிளாக்கில் அமைந்துள்ள ஒரு இடத்தில் ஒரு தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்ததாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. சம்பவ இடத்தில் சிவம் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டனா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அழைப்பாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காலிந்தி குஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் வயரிங் வேலை செய்யும் போது சிவம் மீது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தின் உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆனால், தற்போது அவா்கள் தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க