வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தென்கிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது: இறந்தவா் உத்தர பிரதேசத்தில் உள்ள நாக்லா கெம்கரனைச் சோ்ந்த சிவம் என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஜெய்த்பூா் விரிவாக்கப் பகுதி 2-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்தாா். கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் வயரிங் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் காலிந்தி குஞ்ச் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஜெய்த்பூரில் உள்ள ஜி பிளாக்கில் அமைந்துள்ள ஒரு இடத்தில் ஒரு தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்ததாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. சம்பவ இடத்தில் சிவம் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டனா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அழைப்பாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காலிந்தி குஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் வயரிங் வேலை செய்யும் போது சிவம் மீது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தின் உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆனால், தற்போது அவா்கள் தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.