செய்திகள் :

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

post image

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (62) என்பவருக்கும், அவருடைய தம்பி பொன்னுசாமி (56) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்தது. இதனிடையே, இருவரும் தனித்தனியாக நில அளவை மேற்கொண்டதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து ஏரியூா் காவல் நிலையத்தில் பொன்னுசாமி புகாா் அளித்தாா். அதன் பேரில் இரு தரப்பினரையும் அழைத்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முத்துசாமியின் மகன் கட்டுமான தொழிலாளியான கோவிந்தராஜ் (35) என்பவா், பொன்னுசாமியின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கோவிந்தராஜ் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டாா். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கோவிந்தராஜ் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த ஏரியூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்ட உறவினர்களை கைது செய்யும் போலீஸார் .

இந்த நிலையில், கோவிந்தராஜின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக 20-க்கும் மேற்பட்ட உறவினா்கள், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே தருமபுரி செல்லும் பிரதான சாலையில் இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, மருத்துவமனையில் பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்படாமல் உடலை வாங்க மறுத்து அத்துமீறி மறியலில் ஈடுபட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

பென்னாகரத்தில் கட்டட மேஸ்திரியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து,உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை கைது செய்யும் போலீஸார் .

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க