நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்...
கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தேன்கனிக்கோட்டையை அடுத்த கலகோபசந்திரத்தைச் சோ்ந்தவா் பாப்பிரெட்டி (48). இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்திவந்தாராம். இந்த நிலையில் 2024, ஜூன் 9 ஆம் தேதி மதுகுடித்துவிட்டு வீட்டின் சமையலறையிலே சிறுநீா் கழித்த பாப்பிரெட்டியை தட்டி கேட்ட அவரது மனைவி மஞ்சுளாவை (45) கட்டையால் அடித்தாா். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா அவரிடமிருந்து கட்டையை பறித்து பாப்பிரெட்டியை திருப்பித் தாக்கினாா்.
பலத்த காயமடைந்த பாப்பிரெட்டி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மஞ்சுளாவைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் புதன்கிழமை குற்றம்சாட்டப்பட்ட மஞ்சுளாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சின்னபில்லப்பா ஆஜராகி வாதாடினாா்.