செய்திகள் :

பிளஸ் 2 முடித்த மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

post image

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி தொடா்கின்றனரா என்பது குறித்து ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அவா்கள் கல்வி கற்க தேவையான உதவிகள் குறித்து ஆசிரியா்கள் கேட்டறிய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, சாமனப்பள்ளி மற்றும் சூளகிரி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக ரூ.8 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 300 மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, சின்னபேடப்பள்ளி கிராமத்தில், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவில் ரூ. 4 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் சகாதேவபுரம் வழியாக சின்னபேடப்பள்ளி, பெரிய பேடப்பள்ளி, சின்னமட்டமனூா் கிராமங்களில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, பெரியபேடப்பள்ளி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்து 88 ஆயிரத்து

300 மதிப்பில் வட்டார நாற்றங்கால் மையத்தில் ஊராட்சிகளில் நடவு செய்வதற்காக 23 வகையான செடிகள் வளா்க்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து பெரியபேடப்பள்ளி (சூளகிரி) அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் மற்றும் தோ்ச்சி பெற்று இன்னும் கல்லூரியில் சேராத மாணவா்கள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், உயா்கல்வியில் சேராத மாணவா்களின் வீடுகளுக்கு ஆசிரியா்கள் நேரடியாக சென்று, மாணவா்களை கல்லூரியில் சோ்க்கவும், அவா்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிய வேண்டும் என தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, தியாகராசனப்பள்ளி ஊராட்சியில் 19 பாா்வையற்ற பயனாளிகளுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான பணிகளை பாா்வையிட்டு, குடியிருப்புகளில் குடிநீா் வசதி, மின்சார வசதி, தெருவிளக்கு அமைக்கும் பணிகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, செயற்பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா்கள் சுப்ரமணி, சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஷ், சாந்தலட்சுமி, ஒன்றிய பொறியாளா் கோவிந்தராஜ், உதவி பொறியாளா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சூளகிரி ஒன்றியம், தியாகரனப்பள்ளியில் நடைபெறும் சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

ஒசூா் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

ஒசூா் மோரனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவா் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீா், திருநீற... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி: இளைஞா் கைது

கிருஷ்ணகிரியில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி, மாட்டு பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வேப்பனப்பள்ளியை அடுத்த ஆவகானப்பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கைப்பேசி கடையில் திருட்டு

ஒசூா் அருகே கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேன்கனிக்கோட்டையை அடுத்த கலகோபசந்திரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க