குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
ஒசூா் அருகே கைப்பேசி கடையில் திருட்டு
ஒசூா் அருகே கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உதய்குமாா் என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றவா் புதன்கிழமை காலை கடையை திறக்கவந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 15 கைப்பேசிகள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.