``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
ஒசூா் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ஒசூா் மோரனப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் புதன்கிழமை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மூலவா் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீா், திருநீறு, பஞ்சாமிா்தம், பால் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்து அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்மனுக்கு மகா மங்கள ஆரத்தி தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை வழிபட்டனா்.
படம்: வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி.