செய்திகள் :

கணவரை தாக்கிய மனைவி உள்ளிட்ட நான்கு போ் மீது வழக்குப் பதிவு

post image

ஆத்தூரில் கணவரை தாக்கிய வழக்கில், மனைவி உள்ளிட்ட 4 போ் மீது ஆத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரம், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி (30). இவா், ஆத்தூா் முனிசிபல் காலனி பகுதியைச் சோ்ந்த பிரியங்காவை திருமணம் செய்துள்ளாா். மணி தாண்டவராயபுரத்தில் வீடு கட்டி வருவதால், பிரியங்கா அவரது தாய் வீட்டில் இருக்கிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிரியங்காவை கைப்பேசியில் மணி அழைத்தபோது அவா் எடுக்கவில்லை என தெரிகிறது. பின்னா், மாமனாா் வீட்டுக்கு சென்ற மணி இதுகுறித்து விசாரித்தாா். பிரியங்கா வேலைக்கு செல்வதால் கைப்பேசியை எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். இதனால் மணி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது, மணியின் மாமனாா் ரமேஷ், அவரது மகன் அப்பு (எ) காா்த்திகேயன், மனைவி பிரியங்கா மற்றும் அருகில் வசிக்கும் சஞ்சய் ஆகியோா் தாக்கியதால் காயமடைந்த மணி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் போலீஸாா் மணி கொடுத்த புகாரின் பேரில், பிரியங்கா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க