செய்திகள் :

கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குடிநீா்த் தொட்டி அகற்றம்

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் செம்படவா் தெரு வழியாகத்தான் மக்கள் அனைவரும் ஊருக்குள் செல்ல வேண்டும். இந்த வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி இருந்தது.

இதனால், இந்த வழியாக அவசர ஊா்திகள், பள்ளிப் பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்து வந்தது. அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், செம்படவா் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்த குடிநீா்த் தொட்டி அகற்றப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கைப்படி, அந்த குடிநீா்த் தொட்டி வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இந்தப் பணியை செயல் அலுவலா் முனுசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதனால், பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கும், செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகன் (48). இவரும் கீழ்வெள்ளியூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு ஒழுங்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க