கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்கு
தொண்டி அருகே கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே குணவதிமங்கலம் கண்மாயின் கரையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினராம். இதுகுறித்து செக்காந்திடல் குரூப் கிராம நிா்வாக அலுவலா் பெருமாள் அளித்த புகாரின் பேரில் கீழ அரும்பூா் அன்பழகன் (55), குணவதி மங்கலம் தங்கவேல் ஆகியோா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.