செய்திகள் :

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

post image

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது.

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 30,640 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 44,295 ஆக இருந்தது. அதாவது இந்த ஆண்டு 31% வரை சரிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சரிவு

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி 2024 காலாண்டில் 1,21,070. இதுவே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 96,015 ஆக உள்ளது.

சர்வதேச நாடுகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களை அனுமதிப்பதில் தொடர் சரிவையே இவை பிரதிபலிக்கின்றன. 2023 இறுதிக் காலாண்டில் இருந்து பெருமளவு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை கனடா குறைத்து வருவதை இது காட்டுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்த மாணவர்களில் 6,81,155 பேருக்கு கனடா அரசு அனுமதி அளித்தது. இதில், 2,78,045 பேர் இந்திய மாணவர்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5,16,275 எனக் குறைந்தது. இதில், இந்திய மாணவர்கள் 1,88,465 பேர்.

காரணங்கள் என்ன?

குடியேற்றத் தரவுகளில் இருந்த குளறுபடிகள் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்தது. வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலை, உடல்நலனைப் பேண வேண்டிய அழுத்தம், போக்குவரத்து போன்றவையும் பகுதியளவு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதனிடையே மீண்டும் ஆட்சியைப் பிடித்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, தற்போதுள்ள நிலையே தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

கனடாவில் படிக்க, தொழில் புரிய, வேலைக்காக என பல்வேறு காரணங்களால் தற்காலிக குடியேற்றம் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க |விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க