செய்திகள் :

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

post image

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.  இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் புகார்கள் உள்ளது. இதில் காமய கவுண்டன் பட்டி ஊர்காரர்களுக்கும் கல் உடைக்க உரிமை உள்ளது என்று சசி தரப்பினர் கல் உடைப்பதற்கு அனுமதி வழங்க கோரியும் மேலும் இங்கு எடுக்கபடும் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுத்திட கோரியும்  தொடர்ச்சியாக பார்வர்டு கட்சி சார்பாக போராட்டங்களையும் நடத்தி கொண்டிருந்துள்ளனர்.  இதனால் இந்த கல்குவாரி பிரச்னை தொடர்பாக சசிகுமாருக்கும் எதிர் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சசி என்கிற சதிஷ்குமார்

இந்நிலையில் நேற்று இரவு காமய கவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்தில் கல்குவாரி சம்பந்தபட்டவர்கள் சசியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்  அப்போது அங்கு இருந்த காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசியை கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சசி கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சசியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சசியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்... மேலும் பார்க்க