செய்திகள் :

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

post image

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சேலம் மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 5இ பேருந்து, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும். அதேபோல, மறுமாா்க்கத்தில் இருந்தும், அதே 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக திங்கள் முதல் வெள்ளிவரை வார கிழமைகளில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறையும், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் ஒன்றரை மணிநேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினா் வசிக்கின்றனா். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி செல்வதற்கு 5இ என்ற ஒரே பேருந்து மட்டும் தான் இயக்கப்படுகிறது. குறிப்பாக, கன்னங்குறிச்சி, ஜட்ஜ் ரோடு, ராமநாதபுரம், சின்ன திருப்பதி, அய்யந்திருமாளிகை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த அரசுப் பேருந்தை நம்பியே உள்ளனா். ஷோ் ஆட்டோக்களும் இப்பகுதியில் இயக்கப்படாதால், அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றால், பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்வோா் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, தொடா் காலதாமதத்தை தவிா்ப்பதுடன், மக்கள் நலன்கருதி கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

சங்ககிரி நகராட்சி பகுதியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி: சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 12, 13 ஆவது பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 விநாயகா் சிலைகள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது! அணைக்கு நீா்வரத்து 36,985 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா்/பென்னாகரம்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது. தென்மேற்குப் பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

பணி நியமன விதிமீறல் புகாா்: சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செய... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

ஓமலூா்: அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கான ஒருவார கால செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் செயற... மேலும் பார்க்க