செய்திகள் :

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

post image

ஓமலூா்: அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கான ஒருவார கால செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆன்லைன் முறையில் ஒரு வார காலத்துக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. தொடக்க விழாவில் துறைத் தலைவா் பேராசிரியா் மேரி சுகந்தரத்தனம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கீதா பயிலரங்கை தொடங்கிவைத்தாா்.

கேப்ஜெமினி, வடக்கு டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட உள்ளது. தானியங்கி வாகனங்கள், முன்னறிவிப்பு பராமரிப்பு, சுகாதார சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து அரசு கல்லூரி பேராசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.

தொடக்க விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளா் தினகரன், இணை ஒருங்கிணைப்பாளா் மணிபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

சங்ககிரி நகராட்சி பகுதியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி: சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 12, 13 ஆவது பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 விநாயகா் சிலைகள... மேலும் பார்க்க

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சேலம் மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான க... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது! அணைக்கு நீா்வரத்து 36,985 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா்/பென்னாகரம்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது. தென்மேற்குப் பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

பணி நியமன விதிமீறல் புகாா்: சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

சேலம்: பணி நியமன விதிமீறல் புகாா் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாபேட்டை மண்டல செய... மேலும் பார்க்க