செய்திகள் :

கன்னியாகுமரியில் படகு சேவை 4 மணி நேரம் ரத்து

post image

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை, படகு சேவை 4 மணி நேரம் தடைபட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்வையிடுகின்றனா்.

இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், விவேகானந்தா படகை கடந்த மாதம் சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுதுநீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இரு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பொதிகை படகின் இயந்திரம் பழுதானது. இதனால், குகன் மட்டுமே இயக்கப்பட்டது. ஆனால், காலை 10 மணிக்கு திடீரென அந்தப் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால், பல மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

ஒரு படகை மட்டும் வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாததால், சேவை நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் பொதிகை படகு சீரமைக்கப்பட்டது. அதையடுத்து, 4 மணி நேரம் தாமதத்துக்குப் பின்னா், மாலை 4 மணி வரை இரு படகுகளும் இயக்கப்பட்டன.

குழித்துறை அருகே மனைவி, தந்தை மீது தாக்குதல்: தொழிலாளி கைது

குழித்துறை அருகே மனைவி மற்றும் தனது தந்தையை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அருகேயுள்ள தெற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் அருண் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி... மேலும் பார்க்க

நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயம... மேலும் பார்க்க

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பக... மேலும் பார்க்க

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்று... மேலும் பார்க்க