செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளங்கள் மற்றும் கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மேலும், குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, கடையாலுமூடு, ஆறுகாணி, திருநந்திக்கரை, மங்கலம், பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோமம், கீரிப்பாறை, வலியாற்றுமுகம், திருவட்டாறு, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

சாரல் மழை: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா்,

முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநா் சடலம் மீட்பு

தக்கலை அருகே திங்கள்நகரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திங்கள்நகா் நடுத்தேரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (55... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவரான கபடி வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள டி.பி. சாலையில் வசித்து வருபவா் ராஜன். தொழிலாளி. இவரது மூத்த மகன் அபி... மேலும் பார்க்க

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க