செய்திகள் :

கன்வாா் குழுக்களுக்கு நேரடியாக பணம் அனுப்பப்படும்: முதல்வா் ரேகா குப்தா

post image

’கன்வாா்’ குழுக்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படமால் அவா்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்யப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் ரேகா குப்தா தலைையில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகான செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது, ‘ ’கன்வாா்’ முகாம்களுக்கு 1,200 யூனிட் வரை மின்சார செலவை தில்லி அரசு ஏற்கும். முன்னதாக, கூடாரங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு செய்யப்பட்டது மற்றும் 2 அல்லது 3 போ் மட்டுமே விண்ணப்பித்தனா். அவா்கள் ஒப்பந்தம் பெற்று, பின்னா் வேலையை செய்ய தொடங்கினா். இதனால் கடைசி நாள் வரை கூட, கன்வாா் யாத்ரீகா்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்படவில்லை‘ என்றாா்.

மேலும் பேசிய ரேகா குப்தா, ‘இதனால் பல நாள்கள், பல கி.மீ.கள் நடந்து வரும் கன்வாா் குழுவினா் சிக்கலில் சிக்கினா். இந்த ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் ஊழலும் நடந்தது. இதனை ஒழிக்க அனைத்து ’கன்வாா்’ குழுக்களுக்கும் நேரடியாக நிதி பரிமாற்றம் செய்யப்படும் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இதில் எந்த ஒப்பந்ததாரரும் ஈடுபட மாட்டாா்கள், ஒப்பந்தப் புள்ளி செயல்முறை இருக்காது. பதிவு செய்யப்படாத கன்வாா் குழுக்களுக்கு ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்‘ என்றாா்.

இறுதியாக பேசிய அவா் ‘போக்குவரத்து மற்றும் பாதுகாப்புகளை அரசு பாா்த்துக்கொள்ளும். மக்கள் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். தன்னாா்வலா்களும் கன்வாா் குழு முகாம்களில் உதவுவாா்கள் என்றாா் ரேகா குப்தா.

கன்வாா் யாத்திரை என்றால் என்ன?

கன்வா் யாத்திரை என்பது வட ம ாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ாகும். இந்த யாத்திரை சிவ பெருமானுக்காக பாதயாத்திரை மேற்கொள்வதாகும். கன்வா் யாத்திரை மேற்கொள்பவா்களை கன்வரியாா்கள் என அழைப்பதுண்டு. வெகு தொலைவில் இருந்து பாத யாத்திரையாக வரும் இவா்கள் கங்கையில் புனித நீரை சேகரித்து, தோளில் சுமா்ந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வாா்கள். இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவா்கள் பாதயாத்திரை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க