செய்திகள் :

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

post image

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும் விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணி பெண்களுக்கு சிக்கலான சூழலில் அறுவை சிகிச்சை செய்ய தனி அறுவை சிகிச்சைக் கூடம் உள்ளது. இந்த நிலையில், இந்த அறுவை சிகிச்சைக் கூடத்தின் நுழைவு வாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. அங்கு நோயாளிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

மேலும், மருத்துவமனையில் பல இடங்களில் கட்டடம் சேதமடைந்துள்ளது. 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3 கோடிக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும், கட்டுமானப் பணிகளை தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, கமுதி அரசு மருத்துவமனையில் பெரும் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சேதமடைந்த அறுவை சிகிச்சைக் கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க