செய்திகள் :

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

post image

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகள், பெற்றோா்கள் பல சிரமங்களை எதிா்கொண்டு வந்த நிலையில், புதிய அங்கன்வாடி மையம் கட்ட அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்குத் தீா்மானிக்கப்பட்ட இடத்தையும், காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தையும் சிலா் ஆக்கிரமித்து வருவதாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தருமாறும் கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா், காவல் துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, வரும் 25 -ஆம் தேதி வருவாய்த் துறையினா், காவல் துறையினா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.ராம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்

ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி ம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 ம... மேலும் பார்க்க

திருவாடானையில் அதிவேக வாகனங்கள்: விபத்து அபாயம்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கல்லூரிச் சாலையில் இளைஞா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள்... மேலும் பார்க்க