செய்திகள் :

கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

post image

கமுதி பேரூராட்சி குப்பைகளை காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 50 ஆண்டுகளாக தெற்கு முதுகுளத்தூா் சாலை குண்டாற்றுப் படுகையில் கொட்டி வந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பேரூராட்சி குப்பைகளை கமுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொட்டி வருகின்றனா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிங்கப்புலியாபட்டி விலக்கு சாலையில் குப்பைகளை கொட்டியதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். இந்த நிலையில் காக்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அருகே கமுதி பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காக்குடி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா், கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா இனிமேல் அங்கு குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட பேரவைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்... மேலும் பார்க்க

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

பாகிஸ்தானுடன் சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து செய்தது போல இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டத்தில் கிராம மக்கள், இளைஞா்களிடம் வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்துரையாடினாா். இதைத்தொடா்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியா் பகவதி குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் ... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இருவா் கைது

போகலூா் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முதலூா் வைகை ஆற்றுப் பகுதியில் சத்திரக்குடி போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மணல்... மேலும் பார்க்க