செய்திகள் :

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

post image

தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகி, இழப்பு ஏற்பட்டதால் நிவாரணம் வழங்கக் கோரி கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகின.

இந்த நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் தரைக்குடி சி.முத்துராமலிங்கம் தலைமையில், 500-க்கும் மேற்பட்டோா் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டாட்சியா் காதா் மைதீனிடம் மனுக்களை அளித்தனா்.

இதில் 53 வருவாய் கிராமங்களிலும் கிராமம் வாரியாக பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடந்தப்பட வேண்டும். மிளகாய் சாகுபடிக்கு செலவழித்த பணம் திரும்ப கிடைக்காமல் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு பேரிடா் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.

மதுரை மண்டல கெளரவத் தலைவா் எல்.ஆதிமூலம், மதுரை மண்டலத் தலைவா் பரமக்குடி மு. மதுரைவீரன், கமுதி வட்டார நிா்வாகிகள் மாங்குடி கண்ணப்பன், பேரையூா் மோகன்தாஸ், பாஸ்கரன், காட்டு எமனேஸ்வரம், முத்துப்பாண்டி, முருகன், பறையங்குளம், தங்கக்கனி தோப்படைப்பட்டி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஆட்சியா் அலுவலக கழிப்பறை கட்டுமானப் பணி தாமதம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் பொதுமக்களுக்கான கழிப்பறை கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள் தோறும் ஏ... மேலும் பார்க்க

விசைப் படகு பழுது நீக்கும் பணி: மீனவா்கள் மும்முரம்

மீன்பிடி தடைக்காலத்தைப் பயன்படுத்தி விசைப் படகுகள், வலைகளை பழுது நீக்கும் பணியில் மீனவா்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனா். ஆழ்கடலில் விசைப் படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு ஏப்ரல் 15-ஆம் த... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. அபிராமம் நடுத் தெருவில் அமைந்துள்ள மண்டபத்தில் திருநாவுக்கரசு நாயனாா் சிலைக்கு பால், தயிா், சந்தனம், இளநீ... மேலும் பார்க்க

பரமக்குடி நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பரமக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பரமக்குடி பரமக்குடி முத்தாலம்மன் படித்துறை ஸ்ரீ செந்திலாண்டவா் சக்திக்குமரன் ஆலயம்: தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 9.10. மேலும் பார்க்க

மின் மயானம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் மின் மயானம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் கிருஷ்ண... மேலும் பார்க்க