கயத்தாறில் இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்
கயத்தாறில் உள்ள மேலபஜாரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீா்நிலைகள், விவசாய நிலங்களை காா்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் கூறி கண்டித்தும், வட்டார வளா்ச்சித் துறையைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் திருமுருகனாா், மாநிலச் செயலா் வசந்தகுமாா், மாவட்டச் செயலா் லட்சுமிகாந்தன் ஆகியோா் பேசினா். அதிகாரிகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட மகளிரணித் தலைவி பத்மபிரியா, ஒன்றியத் தலைவா் ஹரிமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.