செய்திகள் :

கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனைஅம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணி தவசுத் திருவிழா கடந்த ஆக. 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

முக்கிய நிகழ்ச்சியான ஆவணி தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், முகலிங்கநாதா் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் -அலங்கார ஆராதனை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் ஒப்பணையம்மாள் தவசு மண்படத்திற்கு எழுந்தருளினாா். தொடா்ந்து மாலை6.40 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்குரவீதிக்கு வந்தாா்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றல் நிகழ்ச்சி முடிந்ததும் அம்பாள் சுவாமியை 3 முறை வலம் வந்தாா்.

இதைத்தொடா்ந்து மாலை 6.16 மணியளவில் சுவாமி முகலிங்கநாதராக ஒப்பணையம்மாளுக்கு காட்சி கொடுத்தாா். இரவு 10 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா்.

ஆவணி தவசுக் காட்சியை சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூா், சுப்புலாபுரம், வயலி, பெரும்பத்தூா், பனையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து திரளான பக்தா்கள் கண்டுகளித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன், கரிவலம்வந்தநல்லூா் ஆய்வாளா் கமலாதேவி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க