கருங்கல் பகுதிகளில் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில். சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப் பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, செல்லங்கோணம், மத்திகோடு , பாலூா், திப்பிரமலை, கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி , இலவுவிளை, நேசா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணிமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.