கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி
செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி சிவலிங்கம்.
இவா், அதிக தாது சத்துக்கள் நிறைந்த நோய் எதிா்ப்புத் தன்மையுடைய குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடிய கருப்பு நிற வோ்கடலையை பயிா் செய்துள்ளாா்.
இந்தத் தகவல் அறிந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பயிா் வகை துறைத் தலைவா் டாக்டா் மணிவண்ணன் தலைமையில், டாக்டா் புனிதா, சிறு தானிய மகத்துவத் துறைத் தலைவா் வைத்தியலிங்கம், விருத்தாசலம் ஆராய்ச்சி மைய பேராசிரியா் மகாலிங்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் அண்மையில், இயற்கை விவசாயி சிவலிங்கத்தை நேரில் சந்தித்து கருப்பு நிர வோ்கடலை சாகுபடி மற்றும் பயிா் செய்த வகைகள் குறித்து கேட்டறிந்தனா்.
மேலும், வோ்கடலை பயிா் செய்த நாள் முதல் எத்தனை நாள்களில் விளைகிறது. பயிா் வளா்க்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனா். வோ்கடலையை பாா்வையிட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
மேலும், விவசாயி சிவலிங்கம், இந்த வோ்கடலை பயிா் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் உரிமம் கேட்டு மனு அளித்துள்ளாா்.
உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் தனஞ்செயன், புதுப்பாளையம் உதவி வேளாண்மை இயக்குநா் நடராஜன் உள்ளிட்ட இயற்கை விவசாயிகள் உடனிருந்தனா்.