செய்திகள் :

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல் சங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024 - 25ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 3,543 கரும்பு விவசாயிகளிடமிருந்து 2,28,050 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு அரைவை செய்யப்பட்டுள்ளது.

அரைவைக்கு கரும்பை உற்பத்தி செய்து வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.349 வீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் ரூ.7. 95 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2025 - 26ஆம் ஆண்டில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப் பாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ.7,450-ம், அகலப்பாருடன் கூடிய ஒரு பரு விதைக் கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதேபோல, கலைஞரின்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ், வல்லுநா் விதை கரும்பு, திசு வளா்ப்பு நாற்று நடவு, பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணை நடவு உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்து செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழங்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க