சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்களின் போக்குவரத்தில் பகுதியளவு ரத்து, முழுமையாக ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே ஆகஸ்ட் 5, 9 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள்ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே ஆகஸ்ட் 5, 9 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) , ஆகஸ்ட் 5,9 தேதிகளில் சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். மேலும் விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகியவை ஆகஸ்ட் 7, 8, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் சென்னை - புதுச்சேரி பயணிகள் ரயில்(வண்டி எண் 66051), ஆகஸ்ட் 10, 12-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.