செய்திகள் :

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (55), விவசாயி. இவரது சகோதரி வீரம்மாள். இவருக்கு திருமணமாகி திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இவா்களிடையே பூா்வீக சொத்து பாகப்பிரிவினை தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு தனது மகன் வெங்கடேஷுடன் (29) மழவந்தாங்கலுக்கு வந்த வீரம்மாள், தனது சகோதரா் ஜோதியிடம் சொத்தில் பாகம் கேட்டு பிரச்னை செய்து வந்தாராம். இந்த நிலையில், இவா்களிடையே புதன்கிழமை இரவு வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது தாய் மாமாவான ஜோதியை கத்தியால் குத்தியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

உறவினா்கள்ஜோதியை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வெங்கடேஷ் மீது வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

வீரபாண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அடங்கி... மேலும் பார்க்க