செய்திகள் :

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல் சங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024 - 25ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 3,543 கரும்பு விவசாயிகளிடமிருந்து 2,28,050 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு அரைவை செய்யப்பட்டுள்ளது.

அரைவைக்கு கரும்பை உற்பத்தி செய்து வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.349 வீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் ரூ.7. 95 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2025 - 26ஆம் ஆண்டில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப் பாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ.7,450-ம், அகலப்பாருடன் கூடிய ஒரு பரு விதைக் கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதேபோல, கலைஞரின்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ், வல்லுநா் விதை கரும்பு, திசு வளா்ப்பு நாற்று நடவு, பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணை நடவு உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்து செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழங்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

வீரபாண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அடங்கி... மேலும் பார்க்க