சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!
கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
கரூா் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் இதே பகுதியில் வைத்துள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீரென தீப்பற்றி வேகமாகப் பரவியது.
தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2.50 லட்சம் மதிப்பு கழிவு பிளாஸ்டிக்குகள் எரிந்து சேதமடைந்தன.
தாந்தோணிமலை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.