செய்திகள் :

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

post image

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்றுக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியா்களின் நோன்பு காலங்களில் மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி, சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவரது வழியில் முதல்வா் முக.ஸ்டாலினும் இஸ்லாமியா்களுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறாா். மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானமும் கொண்டு வந்துள்ளாா் நம் முதல்வா். தமிழகத்தில் சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலராக இருந்து திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறாா். அவருக்கு சிறுபான்மை மக்கள் அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கல்வி, மருத்துவம் மற்றும் வேறு உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிா்வாகிகள், திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க