செய்திகள் :

கரூர்: ``காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல'' - உயிரிழந்தவரின் குடும்பம்

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு...

"என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந்தோம்.

ஆனா, விஜயை நாங்க பார்க்கல. பார்க்குறதுக்குள்ள எங்களைக் கீழே போட்டு தள்ளிட்டாங்க. அவரு ரெண்டு வார்த்தை பேசும்போதே, நாங்க கீழே, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு கத்திக்கிட்டுதான் இருந்தோமே தவிர, அவரோட பேச்சை கேட்கல... அவரோட முகத்தைக் கூட பாக்கல.

உயிரிழந்தவரின் குடும்பம் | கரூர்
உயிரிழந்தவரின் குடும்பம் | கரூர்

எங்களை யாராலயும் காப்பாத்த முடியல. எல்லாரும் இழுத்துக்கிட்டு தான் இருந்தாங்களே தவிர, எங்களாலயும் வெளிய வர முடியல.

நாங்க எந்திரிச்சப் பிறகு தான், எங்க பெரியம்மா மயக்கம்போட்டு விழுந்தது தெரியும்.

அங்கிருந்த கும்பல் நகர்ந்த அப்புறம் தான், பெரியம்மாவைப் பாத்தோம். எல்லாரும் தூக்குங்க... தூக்குங்கனு சொல்றோம். ஆனா, யாருமே உதவிக்கு வரல.

கொஞ்ச நேரம் கழிச்சு, ரெண்டு மூணு பசங்க வந்து ரோட்டுல தூக்கிட்டு வந்து படுக்க வெச்சாங்க.

கரூர் துயரம்
கரூர் துயரம்

போலீஸ்காரங்க கிட்ட சொன்னாலும், 'சரி.. சரி'னு சொல்லிட்டு போறாங்களே தவிர... அவங்களும் ஒண்ணும் பண்ணல.

ரெண்டு, மூணு பசங்க தான் ஆம்புலன்ஸை கூப்பிட்டு வந்தாங்க. ஆம்புலன்ஸுமே பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிங்க கிட்ட நிக்கல. இப்படி ஒரு உயிரயே எடுத்துட்டாங்க.

வேலுசாமிபுரத்துல இருந்து ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு ஆட்டோகாரங்க ரூ.1,500 கேக்கறாங்க. நாங்க அந்தக் காசைக் கொடுத்து தான் எங்க பெரியம்மா உயிர் போனப்புறம் வந்தோம்."

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' - உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன... மேலும் பார்க்க

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக வைத்த கோரிக்கை என்ன? நாளை விசாரணை

கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது. இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூர்: ``ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பிரச்னையே" - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: `இது சினிமா ஷூட்டிங் இல்லை, விஜய் மக்களுடன் நின்றிருக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: 'எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்'- செல்வப்பெருந்தகை

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம்' - மோடி அறிவிப்பு

கரூர் துயர சம்பவத்திற்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் மோடி. தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் மோடி. அது குறித்து பிரதமர்... மேலும் பார்க்க