செய்திகள் :

கரூர்: பிரபல ரௌடியை சுட்டுப்பிடித்த போலீஸார்!

post image

கரூர்: கரூரில் காவல்துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகளான வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு லைட் ஹவுஸ் கார்னர் பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அந்த அப்பாவி பயணியை கொலை வெறியோடு தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த பயணி கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புதன்கிழமை மாலை பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை முயற்சி வழக்கில் தப்பியோடிய ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அரிக்காரம்பாளையம் மேம்பாலம் அருகில் பிடிபட்டுள்ளார். அப்போது பென்சில் தமிழழகன் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தனது துப்பாக்கியால் வலது கால் முட்டிக்கு கீழ் பகுதியில் சுட்டுப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து ரௌடி தமிழழகன் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரௌடி பென்சில் தமிழழகன் மீது கொலை, வழிப்பறி, அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பயணி ஒருவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலைவெறியோடு தாக்கிய பிரபல ரௌடி கரூர் பகுதியில் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்குமா? - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் தற்போது பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருப்பது உடல் பருமன்தான் என்று மருத்துவர்கள் கூறுகிறா... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில்... மேலும் பார்க்க

சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு க... மேலும் பார்க்க

15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதை விரைவுபடுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது தெ... மேலும் பார்க்க

சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞா... மேலும் பார்க்க

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என உருக்கமாக தெரிவித்துள்ள ட... மேலும் பார்க்க