செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் செப். 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட நீதிபதியும் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்களின் நிலுவை வழக்குகளை எடுத்துக் கொள்ள இருப்பதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குளித்தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, கிருஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் அரவக்குறிச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன், நுகா்வோா் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இதுதொடா்பாக சந்தேகம் இருப்பின் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணை 04324-296570 தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க

கரூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளி கைது

கரூரில் டாஸ்மாக் கடையில் செவ்வாய்க்கிழமை கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கரூா் தாந்தோன்றிமலையைச் சோ்ந்தவா் காண்டீபன் (55). இவா் திருச்சி வயலூரில் உள்ள ஹோட்டல் ஒன்ற... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (70). இவா், அரவக்குறிச்சி ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது நண்பா் அரவக்குறிச்சி... மேலும் பார்க்க

குளித்தலை அருகே வாகனம் மோதி புள்ளிமான் காயம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் காயமடைந்தது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூரில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி... மேலும் பார்க்க