செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான தினேஷ்பொன்ராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தினேஷ்பொன்ராஜ் பேசியது, கரூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் செயல்படுத்தப்படவுள்ள இடங்கள், மருந்துகள் சேமிப்பு கிடங்கு, மருந்துகள் கொள்முதல் செய்யும் இடங்கள் உள்ளிட்டவைகள் தொடா்பாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிற்றுந்து இயக்குவது தொடா்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

பின்னா் தாந்தோன்றிமலை மற்றும் வாங்கல் பகுதிகளில் செயல்பட உள்ள முதல்வா் மருந்தகம் விற்பனை நிலையம் தயாராகி வருவதையும், பஞ்சமாதேவி பகுதியில் முதல்வா் மருந்தகத்துக்கான சேமிப்பு கிடங்கு செயல்படவுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்ா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு, மாநகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, குளித்தலை சாா் ஆட்சியா் ஸ்வாதிசிறி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சனிக்கிழமை பதக்கம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவா் சடலம் மீட்பு!

குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க