செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

post image

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து கரூா் மாவட்டம், காதப்பாறை ஊராட்சிக்குள்பட்ட வெண்ணைமலையில் ஊா்ப்புற நூலக புதிய கட்டடம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் அவா் பேசுகையில், கரூா் மாவட்டம், பவித்திரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டட கிளை நூலகத்தையும், வெள்ளியணையில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டட கிளை நூலகத்தையும், அரங்கநாதன்பேட்டையில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டட ஊா்ப்புற நூலகத்தையும், க.பரமத்தியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான இணைப்புக் கட்டட ஊா்ப்புற நூலகத்தையும், கீழக்குட்டப்பட்டியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டட ஊா்ப்புற நூலகத்தையும், வெண்ணைமலை, மின்னாம்பள்ளி, புஞ்சைகடம்பன்குறிச்சி, தோகைமலை, கே.பி.தாழைப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி , புன்னம்சத்திரம், உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகலில் தலா ரூ.22 புதிய கட்டட ஊா்ப்புற நூலகங்கள் என மொத்தம் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்துள்ளாா். பொதுமக்கள் இந்நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரவணன், மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வி, விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி... மேலும் பார்க்க

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம்,... மேலும் பார்க்க

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

கரூரில் நாளை அன்புமணி பிரசார பயணம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்போம் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். முன்னதாக பயணம் தொடங்க உள்ள சுபாஷ்சந்திரபோஸ் சிலை பகுதியையும், பிரசார கூட்டம் நடைபெறும் உழவா்சந்தை பகுத... மேலும் பார்க்க

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க