செய்திகள் :

கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்! பேரழிவுக்கான அறிகுறியா?

post image

மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய ‘டூம்ஸ் டே’ மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ’ஓர்’ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த மீன்களை ஜப்பானிய புராணக் கதைகளில் கடல் கடவுளின் தூதன் என்று வர்ணிக்கப்படுகிறது. பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கும் எனக் கருதப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்கு முன்னர் சுமார் 20 ’டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் அந்நாட்டு கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

இதனைத் தொடர்ந்து, தற்போது மெக்சிகோவின் கடல் பகுதிகளில் இவ்வகை மீன்கள் சமீப காலமாக கரை ஒதுங்கும் விடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய அளவிலான பேரழிவு ஏற்பட இருப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இவை அனைத்தும் கட்டுக்கதைகள் எனவும் கடலினுள் ஏற்படுகின்ற ’எல் நினோ’ மற்றும் ’லா நினா’ போன்ற சூழ்நிலை மாற்றங்களினால் மட்டுமே இவை பெரும்பாலும் இறந்து கரை ஒதுங்குவதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடல் நீரின் வெப்ப நிலை மாற்றங்கள், நோய்கள் மற்றும் காயங்கள் ஆகிய காரணங்களினால் கூட இவை மரணித்து கரை ஒதுங்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, சுமார் 36 அடி நீளம் வரையில் வளரக்கூடிய இந்த அரிய வகை ஓர் மீன்கள், கடலின் 656 அடி முதல் 3,280 அடி வரையிலான ஆழத்தில் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க