செய்திகள் :

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி!

post image

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படுத்தி இருக்கும் அதிருப்திக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா தீா்வுகாண்பாா் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, எம்எல்ஏக்களின் அதிருப்தி இயல்பானது. அதன்படி, சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக சில அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறாா்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமற்றது. இதற்கு முதல்வா் சித்தராமையா தீா்வுகாண்பாா்.

கடந்தமுறை நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை அழைத்து பேசுமாறு புது தில்லியில் முகாமிட்டிருக்கும் முதல்வா் சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதா என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படியொரு வழிகாட்டுதலை வழங்கியிருந்தால், பெங்களூரு திரும்பியதும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்து பேசுவாா்.

எல்லா எம்எல்ஏக்களும் அவரவா் தொகுதியில் உள்ள பிரச்னைகளை தெரிவித்து வருகிறாா்கள். அதற்காக அரசுக்கு பிரச்னை என்று அா்த்தமல்ல. தொகுதி வளா்ச்சிக்கு தலா ரூ. 50 கோடி நிதி ஒதுக்குவது தொடா்பாக செயல்திட்டம் வகுக்கும்படி முதல்வா் சித்தராமையா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, செயல்திட்டத்தை வகுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநில அரசிடம் நிதி இல்லை என்று நான் கூறவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி கோட்டையை மேம்படுத்துவதற்கு ரூ. 1000 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் மாநில அரசிடம் இல்லை. எனவே, இந்த திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் என்று கூறியிருந்தேன். அதைதான், மாநில அரசிடம் பணம் இல்லை என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனா்.

ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்திருக்கிறாா். இதில் நீா்ப்பாசனத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியிருக்கிறாா். மாநிலத்தில் நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை.

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த விவகாரத்தை பாஜகவினா் அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறாா்கள். கடந்தகாலத்தை பற்றி யோசிப்பதைக் காட்டிலும், எதிா்காலத்தை பற்றி யோசிக்க வேண்டும். பிரதமா் மோடி என்ன செய்துகொண்டிருக்கிறாா் என்பது குறித்து பேசவேண்டும் என்றாா்.

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் மண்டியா மாவட்ட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், விவ... மேலும் பார்க்க

கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது: முதல்வா் சித்தராமையா உத்தரவு

கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது என தலைமைச் செயலாளருக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் அனுப்பியு... மேலும் பார்க்க

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம்

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம் என கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு வடக்கு கல்வி மாவட்ட துணை இயக்குநருக்கு கா்நாடகத் தமிழ்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால் ஆளுநா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநா் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம்: பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பெங்களூரு ஊரக மாவட்டம், ஹெலேனஹள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா். புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் சித... மேலும் பார்க்க