செய்திகள் :

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

post image

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 30 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கொப்பாள் மாவட்டத்தில் பணியாற்றிய கலகப்பா நிடகுண்டி என்ற நபர் மாதம் ரூ.15,000 சம்பளம் பெற்றுள்ளார். அவருக்கு சொந்தமாக 24 வீடுகள், 4 வீட்டு மனைகள் மற்றும் 40 ஏக்கர் விளைநிலம் இருந்துள்ளது.

சொத்துக்கள்
சொத்துக்கள்

சொத்துக்கள் அனைத்தும் அவரது பெயரிலும், அவரது மனைவி மற்றும் சகோதரர் பெயரிலும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 வாகனங்கள், 350 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கலகப்பா, முன்னாள் KRIDL பொறியாளர் ZM சின்சோல்கர் என்பவருடன் இணைந்து, 96 முழுமையடையாத திட்டங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ₹72 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.

லோகாயுக்தா அதிகாரிகளின் அதிரடி!

வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், லோக் ஆயுக்தா புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை, ஹாசன், சிக்கபாளபுரா, சித்ரதுர்கா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் 5 அரசு அதிகாரிகளின் சொத்துகள் மீது சோதனையிட்டனர்.

Lokayukta Karnataka
Lokayukta Karnataka

ஜூலை 23 அன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உட்பட எட்டு அதிகாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, ₹37.42 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டனர்.

வசந்தி அமர் ஐஏஎஸ் மீதான சோதனை!

முக்கியமாக வசந்தி அமர் பி.வி. என்ற ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடங்களில் சோதனையிட்டனர். இவர் கர்நாடகாவின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான K-RIDE-இல் சிறப்பு துணை ஆணையராக பணியாற்றினார்.

பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டத்திற்கான (BSRP) நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்மீது நடத்தப்பட்ட சோதனையில் ₹7.4 கோடி மதிப்புள்ள விவசாய நிலம், ₹12 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள், ₹90 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் உள்ளிட்ட ₹9.3 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க