செய்திகள் :

கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

post image

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து இன்றுமுதல் 3 நாள்களுக்கு ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் மாற்றமா?

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.

முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் கடைசி இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வராக பதவி வகிக்க பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டபட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சித்தராமையா முதல்வராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளரும் ராம்நகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன், ”இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மேலிடத்தில் ஒரு உடன்பாடு இருக்கிறது. அதன்படி சித்தராமையா ஆட்சியை ஒப்படைக்க வேண்டும், டி.கே. சிவகுமார் முதல்வராக வருவார், இரண்டு முதல் மூன்று மாதங்களில் கட்சி மேலிடம் முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவரே முதல்வராகத் தொடர்வார் என்று தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த வாரம் தில்லிக்கு பயணம் மேற்கொண்ட சித்தராமையா கட்சியின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை தொடர்பாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், பதவியை தக்க வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் சித்தராமையா மேற்கொள்வார். முடியாத பட்சத்தில் மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவின் பெயரை அடுத்த முதல்வராக பரிந்துரைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை

கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாகச் சந்தித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்துகிறார்.

இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் 40 எம்எல்ஏக்களை சந்திக்கிறார். தொகுதி நிலவரம், நிதி ஒதுக்கீடு, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவருடனும் 20 நிமிடங்களுக்கு மேல் சுர்ஜேவாலா பேசவுள்ளார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதையடுத்து, எம்எல்ஏக்கள் பதில்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு சுர்ஜேவாலா அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

அதனடிப்படையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை தொடர்பாகவும் முதல்வர் மாற்றம் தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந... மேலும் பார்க்க

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க