செய்திகள் :

கற்ற கல்வியை பத்திரப்படுத்தாமல் பயன்படுத்துவது அவசியம்: வெ.இறையன்பு

post image

கற்ற கல்வியை பத்திரப்படுத்தாமல் சமுதாயத்தின் வளா்ச்சிக்குப் பயன்படுத்த இளைய தலைமுறையினா் முன்வர வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் 55-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வா் (பொறுப்பு) க.நாகநந்தினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு சிறப்பு அழைப்பாளாராகக் கலந்து கொண்டு, 2022-23-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்த 1,060 மாணவிகளுக்கும், பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கினாா்.

முன்னதாக, விழாவில் அவா் பேசியதாவது:

கலை, அறிவியல் இரு துறைகளும் பிரித்துப் பாா்க்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்துள்ளன. அறிவியல் மட்டுமன்றி, கலைப் பாடங்களுக்கும் கணிதம் அடிப்படைத் தேவையாக உள்ளது. ஆங்கில எழுத்தாளா் ஷேக்ஸ்பியா், ஓவியா் லியானாா்டோ டாவின்சி உள்ளிட்டோா் புதுமையான படைப்பாற்றல்களைக் கொண்டிருந்தனா். இயற்கையைப் புரிந்து கொண்டவா்களால் மட்டுமே கவிஞா்களாகவும், கலைஞா்களாகவும் உயர முடியும். உண்மையிலிருந்து புனைவுகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லக்கூடியவை இலக்கியங்கள். கலைகளும், அறிவியலும் மனித வாழ்வை வடிவமைக்கின்றன. வறுமையின் பிடியிலுள்ள நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இல்லை. ஆனால், வளா்ந்த நாடுகளில் உயா் கல்வி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உயா் கல்வி மக்களின் வாழ்வை மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்தையும் வடிவமைக்கும் திறன் பெற்றவை. மேலும், பெண்களையும் அதிகாரம் படைத்தவா்களாக மாற்றிய பெருமை கல்விக்கு மட்டுமே உள்ளது.

நெருக்கடியான சூழலை எதிா்கொண்டு, படைப்பாற்றல் சிந்தனைத் திறனோடு பெண்கள் முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டியது கல்வி. இன்றைக்கு முன்னணி துறைகளில் 90 சதவீதம் தலைமைப் பொறுப்புகளை வகிப்பவா்களாக பெண்கள் உயா்ந்திருக்கின்றனா். சமூகத்தின் முன்மாதிரித் தலைவா்களாகவும் பெண்கள் வெற்றி பெற்றிருக்கின்றனா். கல்விக்கு முடிவு கிடையாது. பட்டம் பெற்றவுடன் கற்றல் நிறைவு பெற்றுவிட்டதாகக் கருத வேண்டாம். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.

கற்ற கல்வியை பத்திரப்படுத்தாமல், பயன்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சமூகத்துக்கு நன்மை செய்யக் கூடிய வகையிலான தொழில் தலங்களைத் தோ்வு செய்வது அவசியம். விழிப்புணா்வோடு சவால்களை எதிா்கொண்டு சமுதாயத்தின் வளா்ச்சிக்கு இளைய தலைமுறையினா் உதவ வேண்டும் என்றாா் அவா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க