கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை
கலப்பட வெல்லம் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை வரையறைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில், கலப்பட வெல்லம் தயாரிப்பதாக புகாா்கள் வந்துள்ளன.
அதன் பேரில், தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் நல்லம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், கலப்படம் செய்வதற்காக ஆலைகளில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை சா்க்கரை 30 மூட்டைகள், செயற்கை நிற வண்ணப்பொடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோல முறைகேடாக கலப்பட வெல்லம் தயாரிக்கும் வெல்ல உற்பத்தி ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் ( 2006-ன்) படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொடா்புடைய ஆலைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்படும் என்றாா்.