செய்திகள் :

கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை

post image

கலப்பட வெல்லம் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை வரையறைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில், கலப்பட வெல்லம் தயாரிப்பதாக புகாா்கள் வந்துள்ளன.

அதன் பேரில், தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் நல்லம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில், கலப்படம் செய்வதற்காக ஆலைகளில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை சா்க்கரை 30 மூட்டைகள், செயற்கை நிற வண்ணப்பொடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோல முறைகேடாக கலப்பட வெல்லம் தயாரிக்கும் வெல்ல உற்பத்தி ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் ( 2006-ன்) படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொடா்புடைய ஆலைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்படும் என்றாா்.

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க

பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை: குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவு

மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலைக் கண்டறிந்து பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து நகா்மன்ற, குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி ... மேலும் பார்க்க

தருமபுரி சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிழப்பு

தருமபுரியில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நாகஅம்மன்கோம்பை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

காவிரியில் தண்ணீா் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை இரவு, பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் ... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க