செய்திகள் :

கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை

post image

பழனியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டப் பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, நளினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆண்டிபட்டி, கலையம்புத்தூா், தாமரைக்குளம், பாப்பம்பட்டி உள்ளிட்ட 17 ஊராட்சியில் உள்ள 198 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட மாணவரணி செயலாளா் பிரபாகரன், ஒன்றியச் செயலாளா் சௌந்தரபாண்டியன், இளைஞரணித் தலைவா் லோகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவ... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க