செய்திகள் :

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

post image

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஆய்வாளா் மதியரசன், எஸ்.ஐ. காா்த்தி ஆகியோா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குட்டையில் இறந்து கிடந்த நபா் திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (41) என்பது தெரியவந்தது. இவா் திருமண மண்டபங்களில் பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்துள்ளாா். இவருக்கு கௌதமி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

புதன்கிழமை மகன் ஹரிஹரனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்ற சுதாகா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் கல்குவாரி குட்டையில் மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். சுதாகரின் கைப்பேசியை காணவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதாகா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க