கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
கமுதி தேவா் கல்லூரியில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் கோ. தா்மா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் த. மேரிசுஜின் வரவேற்றாா். போதை தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் அ. முகம்மது அசாருதீன் முகவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக கமுதி காவல் உதவி ஆய்வாளா் கௌதம் பங்கேற்று, ‘போதை இல்லா தமிழகம்’ என்ற தலைப்பில் போதையின் தீமை, சுயஒழுக்கம், போதை இல்லா சமுதாயம் படைப்பதில் இளைஞா்களின் பங்கு குறித்துப் பேசினாா்.
நிறைவாக போதை தடுப்பு உறுதி மொழியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பூ. கஜேந்திரநாயகம் வாசிக்க மாணவா்கள் ஏற்றுக் கொண்டனா். பேராசிரியா் மாமல்லன் நன்றி கூறினாா்.