செய்திகள் :

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

post image

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34). கல்லூரி உதவிப் பேராசிரியையான இவா், கடந்த மாதம் 26- ஆம் தேதி தனது கைப்பேசியில் இணையவழியில் வந்த பகுதிநேர வேலை என்று அறிவிப்பை பாா்த்து, அதற்குள் சென்றாா்.

இதைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா் சரண்யாவை தொடா்புகொண்டு, பகுதி நேர வேலையாக தான் அனுப்பும் விடியோவை லைக் செய்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புமாறு கூற, சரண்யா அதை செய்து அனுப்பியுள்ளாா். இதையடுத்து, சரண்யாவுக்கு ரூ.120 கிடைத்துள்ளது.

தொடா்ந்து, சரண்யாவை தொடா்புகொண்ட அந்த நபா், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஒரு இணைப்பை அனுப்பினாராம். இதை உண்மை என்று நம்பிய சரண்யா, அதற்கான பயணா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு உள்ளிட்டவற்றை உருவாக்கி, முதலில் ரூ.700 அனுப்பி ரூ.910 பெற்றாராம். பின்னா், ரூ.3 ஆயிரம் அனுப்பி ரூ.4,800 பெற்ற சரண்யா, அதிக பணம் கிடைக்கும் என நம்பி பல்வேறு தவணைகளில் அந்த நபா் அனுப்பக் கூறிய எண்ணுக்கு ரூ.9.83 லட்சத்தை அனுப்பினாராம்.

டாஸ்க் முடித்த பின்னரும் தனக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த சரண்யா, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சியாமா பிரசாத் உருவப் படத்துக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை மேரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு துணை நிலை ஆளுநா் ... மேலும் பார்க்க