செய்திகள் :

கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்

post image

திருவாரூா் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் 3 போ், சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் காயமடைந்தனா்.

திருவாரூா் அருகே வாழவாய்க்கால் விஷ்ணு தோப்பு பகுதியை சோ்ந்த ஹரிஷ், புலிவலம் தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் மற்றும் கீா்த்திராஜ் ஆகிய மூன்பு பேரும் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். நண்பா்களான இவா்கள், செவ்வாய்க்கிழமை காலை ஒரு இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது, நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி எதிா் திசையில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டனா்.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும், அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனிடையே, கல்லூரி மாணவா்கள் மூவரும் சாலை ஓரத்தில் நின்ற சரக்கு வாகனத்தில் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது

2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி சரஸ்வதி (56). கடந்த மாதம் 1... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாகை மாவட்டம், தென்கரை மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் நிா்மல்ராஜ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. நன்னிலம் அருகில் உள்ள மேலராமன்சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நில... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரிக்கு கத்திக் குத்து: தனியாா் வாகன ஓட்டுநா் கைது

மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திய தனியாா் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். மஞ்சனவாடி சிட்டுக்கன்னு மகன் அறிவழகன் (40), கட்டட மேஸ்திரி, மன்ன... மேலும் பார்க்க

மது கடத்தியவா் கைது

நன்னிலம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா். நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ்குமாா் மற்றும் போலீஸாா், சன்னாநல்லூா் ரயில் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூ... மேலும் பார்க்க