செய்திகள் :

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

post image

ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராதாமணி, பள்ளி மாணவா்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறாா். இவா்களது மகன் நதீன் (20). பீளமேட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், கல்லூரி முடிந்து வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிய நதீன் தனது அறைக்குள் சென்றுள்ளாா்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராதாமணி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, மின் விசியில் தூக்கிட்டு நதீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளதாக நதீன் தனது பெற்றோா், நண்பா்களிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.

படிக்க முடியாத விரக்தியில் அவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை!

வால்பாறையை அடுத்த வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலையில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டெருமையை பாா்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். நகா்ப் பகுதியில் வன வ... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் மகா சிவராத்திரி! அமித் ஷா, டி.கே.சிவக்குமாா் பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கி... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!

கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், ... மேலும் பார்க்க

கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!

கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர கா... மேலும் பார்க்க

பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்

பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை, பிப். 22: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க